வியாழன், அக்டோபர் 15, 2009

இஸ்லாம் பெண்களையும்,குழந்தைகளையும்,போரில் கொல்ல அனுமதிக்கிறதா?....

கருத்துகள் இல்லை :
சகோதரர் திருச்சிக்காரன்(சுந்தர்) அவர்களது கேள்வியும்,எனது பதிலும்....

//இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல் - புகாரி, 3012).//


//இந்த விசயத்திலே இதைப் படிக்கும் யாரும், பெண்களும் , குழைந்தைகளும் கூட காபிர் தான் அதனால் அவர்களைத் தாக்க தயங்காதே என்றே பொருள் கொள்ளவார்கள்.//
//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//
எனது பதில்:


சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
தங்களின் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்,அது பற்றி,முழுமையாக ஆராயக் கடமைப் பட்டுள்ளேன்,ஏனென்ரால்,இஸ்லாத்தில் நான் ஒரு மாணவனே,கற்றுள்ளேன்,இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்...
போர் சம்பந்தமான ஹதீஸ்களை பார்க்கும் போது,நபியவர்கள் காலத்தில் நடைபெற்ற போர்களுக்கான,ஹதீஸ் ஆதாரங்களில்,ஒன்று கூட மேற் சொன்ன ஹதீஸுக்கு சாதகமான அறிவிப்பை கொண்டு இல்லை....
நபியவர்கள் காலத்தில்,நடந்த எந்த போர்களும் இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட வில்லை.பிறகு ஏன் இது போன்ற ஒரு சந்தேகத்தை நபித்தோழர்கள் கேட்டு,அதற்கு,நபி (ஸல்) அவர்களும் இசைவதைப்போல் பதில் அளித்தார்கள் என பார்ப்போம்.


இஸ்லாமிய அரசு கட்டமைக்கப்பட்ட காலத்தில், யாத்ரிப் (மதீனா)நகரம், இஸ்லாமிய தலைமையகமாக விளங்கியது,அதை சுற்றியுள்ள,எதிரிகள் யூத கிறிஸ்தவர்களாகவும்,கிராமத்து அரபிகளாகவும் இருந்தனர்...
இவர்களில்,யூதர்கள் முஸ்லிம்களுடன் நண்பர்களாக பழகிக் கொண்டே அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் வல்லவர்கள்,இன்னும் சிலர் வெளிப்படையாகவே எதிப்பை காட்டி முஸ்லிம்களை நேரடியாக எதிர்கொள்ளும் திறன் கொண்டு இருந்தார்கள்.வேறு சிலர்,சிறு குழுக்களாக வாழக்கூடியவர்கள்,அவர்களுக்கு எந்த ஒரு நிலையான இருப்பிடமும் இருந்திருக்கவில்லை,


இவர்களில் நாடோடி வாழ்வு வாழ்ந்த கடைசிப் பிரிவினர்,முஸ்லிம்களுக்கு எதிராக குழப்பம் செய்வர்.பின்பு அவர்களுக்கு எதிராக,படைப்பிரிவு அனுப்பப் பட்டால்,அதை எதிர்கொள்ளாது, இடம்பெயர்ந்து சென்றுவிடுவர்,அல்லது,அது சமயம் குகைகளிலும்,மலைக் கணவாய்களிலும் மறைந்துகொள்வர்.இப்படிப் பட்டவர்களின்,செயல்களை கட்டுப்படுத்த,இரவு நேரத்தாக்குதல் தவிர வேறுவழி இருந்திருக்க வாய்ப்பில்லை.


மேலும் அந்த நபிமொழியை ஆதாரமாக கொண்டு,எந்த ஒரு தாக்குதல் சம்பவமும் நடந்ததற்கான ஹதீஸ் ஆதாரங்களையும் நான் காணவில்லை.


எனவே மெற்கண்ட அந்த ஹதீஸை நாம் விதிவிலக்காகவே கருத முடியும்... 


//இவ்வாறாக இன்னும் பல வஹீகள் உள்ள நிலையில், இஸ்லாம் என்பது உலக அமைதிக்கு பேராபத்தை விளைவிக்கும் ஒரு மார்க்கமாக பலரும் கருதும் கருத்துக்கு மாறாக நாம் எதுவும் சொல்ல முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.//


இதை தங்களின் சொந்தக் கருத்தாகவே எண்ணுகிறேன்.


அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள்.
ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்: 2945 



மேலும் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான மேற்கண்ட ஹதீஸயே,நாம் இதற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்....


மேலும் இது போன்ற இரவு நேரத்தாக்குதல் நடந்து,பெண்களும்,குழந்தைகளும் முஸ்லிம்களால்,கொல்லப்பட வில்லை என அறுதியிட்டுக் கூற முடியும்....


மேலும் ரஹ்மத்துல்லாஹ் போன்றவர்கள்,ஆதாரமாக காட்டும் ஹதீஸ் 3012,3013.....
ஆனால் அதை தொடர்ந்து வரும் 3014,3015 எண் கொண்ட ஹதீஸ்களை அவர்கள் பார்க்காமல் விட்டது,என்ன உள்நோக்கத்தின் அடிப்படையில் என எனக்கு விளங்கவில்லை....


அவை:
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்,
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை "கண்டித்தார்கள்".
ஸஹீஹுல் புஹாரி:3014


 இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும்,குழந்தைகளையும்,கொல்வதை "தடைசெய்தார்கள்".
ஸஹீஹுல் புஹாரி:3015


தாங்கள் மேற்கோல் காட்டும் அந்த ஹதீஸை அடுத்தே,மேலே நான் குறிப்பிட்டு இருக்கும் 3014,3015 ஆகிய ஹதீஸ்கள்,முக்கியத்துவத்துடனே,பதியப்பட்டுள்ளது.
இது முந்தய ஹதீஸை தவறான உதாரணமாக மக்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது,என்ற கருத்தை  தாங்கி நிற்கிறது....
சகோதரரே,இந்த நிலை,எல்லா காலகட்டங்களிலும்,வாழும் சமூகத்தினருக்கு விதிவிளக்காக அமைவதே......அதை கருவாக கொள்வது அறியாமையே.....அறிவுடமையாகாது......




சகோதரர் திருச்சிக்காரன் அவர்களே,
எந்த நிலையிலும்,நபி(ஸல்) அவர்கள் மனித நேயத்துடனேயே நடந்துள்ளார்கள்,அவர்களின் நேர்மையினை,பல்வேறு காலகட்டங்களில் அவர்களது எதிரிகளே புகழ்ந்துரைக்க காணலாம்...


நன்றி


அன்புடன்
ரஜின்

புதன், அக்டோபர் 14, 2009

சகோதரர் ராம் அவர்களுக்கு எனது பதில்....

கருத்துகள் இல்லை :


////சகோதரர்களே…
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன்,முதலில்,மனிதனே அல்ல…பின்பு எப்படி அவன் முஸ்லிமாக இருக்க முடியும்,இந்தியாவில், வசித்துக்கொண்டு, அதன் பாதுகாப்பில் இருந்துகொண்டு,அதன் நலன்களை அனுபவித்துக் கொண்டு,அன்னிய நாட்டிற்கு ஆதரவு தருபவன், நயவஞ்சகன்….அவனும்,அப்படி செய்ய தூண்டுபவனும்,முஸ்லிம் அல்ல…///

ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?
///லவ் ஜிகாத்,இந்த பெயரை,முதன் முதலில்,பவானி காதலிக்கிறால்,என்ற, பதிவில்,தான் கேள்விப்படுகிறேன்…
முதலில்,இது போன்ற,நோக்கத்துடன் செயல்படுபவன் முஸ்லிம் அல்ல…///

ஆனால் செய்கிறார்களே, அவர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?
இப்படி அவன் முஸ்லீம் அல்ல என்று கூறிவிடுவது சூப்பர் எஸ்கேபிஸம் தவிர வேறில்லை.
அப்படி முஸ்லீம் அல்லாத ஒருவரை ஏன் நீங்கள் மதத்தில் வைத்திருக்கிறீர்கள். கொயம்பத்தூரில் குண்டுவைத்ததாக தண்டனை பெற்ற முஸ்லீம் குற்றவாளிகளை உங்கள் மதத்திலிருந்து நீக்கி விட்டீர்களா? அதுவும் இல்லை. அப்புறம் நீங்கள் சொல்வது சால்ஜாப்புதானே!
இப்படித்தான் ஒரு கிறிஸ்தவ மத மாற்ற நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஒரு கண்ணத்தில் அடித்தால் எதிரிக்கு மறுகண்ணத்தையும் காட்டு என்று சொன்ன ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன், அதற்கு அவர் கிறிஸ்து அவனுக்குள் இருந்திருந்தால் அப்படி செய்திருக்கமாட்டான். கிறிஸ்துவாக புஷ் இல்லை என்று சொல்லிவிட்டார்.
உங்களைப் பொறுத்தவரை ஜிகாத் என்ற பெயரில் குண்டுவைப்பவன் முஸ்லீம் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிடுவீர்கள். அவர்களைப் பொறுத்தவரை கொலைபாதகன் கிறிஸ்துவன் இல்லை என்று கூறி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். உங்களுக்கு இடையில் இந்துக்கள் சாக வேண்டும்.
அதர்மம் செய்பவனுக்கு தர்மப்படியான போர் சரிப்பட்டு வராது என்று துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்த சொல்லிக்குடுத்த கிருஷ்ணனின் வழியே சிறந்தது இந்தக்காலத்திற்கு என்று இந்துவுக்கு படுகிறது. அப்படி செய்துவிட்டால் இந்துத்தீவிரவாதம் என்று சொல்லி இன்னும் எங்களை ஏறி மிதிப்பீர்கள்.
மத்தளமானது இந்து மதம். மத்தளத்தை கொட்டிவிட்டு சத்தம் மட்டும் கேட்கக்கூடாது என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?

--------- ----------- ----------- -------------- --------------------- ------------- ------------- ---------- -------------- ----------
எனது பதில்:
சகோதரர் ராம் அவர்களே.
அவன் செய்தானே,அவனை என்ன செய்யப் போகிறீர்கள்,….இந்த கேள்வி நீங்கள் இந்திய அரசை பார்த்து கேட்டால் பொருத்தமாக இருக்கும்,நானோ,கமல் சொல்வது போல காமன் மேன்,அவ்வளவு தான்.நீங்களும்,காமன் மேன் எனவே நம்புகிறேன்…..
ஒருவன் தவறு செய்தால்,அவனை ஒட்டுமொத்த சமுதாயத்தின்,தார்மீக பொருப்பு கொண்ட பிரதிநிதியாக பார்க்கும்,தங்களது பார்வை,தவறானது….
// ஏசுவை பின்பற்றும் புஷ் ஆப்கான் மற்றும் ஈராக்கில் அத்தனை மக்களை கொன்றானே அப்போ கிறிஸ்துவம் தோற்றது தானே? என்றேன்//
என்ன ஜார்ஜ் புஷ் கிறிஸ்தவ மதத்தை தோற்றுவித்தவரா? அல்லது,கிறிஸ்தவ மததை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரா?
அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்,அவர் அதை பின்பற்றுவதும், பின்பற்றாதததும், அவரது உரிமை….
அவர் செய்யும் காரியங்களுக்கு,கிறிஸ்தவ மதத்தினை பொறுப்பாக்குகிறது, தங்கள் கேள்வி…….அவர்செய்த ஒரு காரியத்தால்,கிறிஸ்தவ மதம் தோற்றுவிட்டதாக,நீங்கள் சொன்னால்,உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷினரிகளில்,60% அமேரிக்கர்களுடையது,அதை கொண்டு,அவர்கள் மக்களுக்கு அள்ளிகொடுக்கிறார்கள்,(நோக்கம் எதுவாகட்டும்) அப்போ கிறிஸ்தவம் ஜெய்த்து விட்டதா?
தனி ஒருவனின் செயல்பாடு,முழுமதத்தின்,பிரதிபலிப்பும் அல்ல,அவனது செயல்களுக்கு,மதத்தையும் பொருப்பாக்க முடியாது…..
இல்லை.மதம் தான் பொருப்பு என்று,நீங்கள் சொன்னால்,காந்தியை கொன்ற கோட்சே மூலமோ,அல்லது,குண்டு வைத்த துறவி பிரக்யா சிங்,மூலமோ ஹிந்து மதம் தோற்று விட்டது,என்று,நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
நக்சல்லைட்டுகள் தாக்குதல்கள்: 2600 பேர் பலி
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18343
இந்த நியூச படிங்க……
இந்த இயக்கத்த சார்ந்தவங்க எல்லாம்,ஹிந்துக்கள்,எனவே, அவர்களுக்கு, ஹிந்து மதம் தான் பொறுப்பேற்க்குமா? அல்லது சகஹிந்து எனும் ரீதியில், தாங்கள் தான் பொறுப்பேற்று கொள்வீர்களா?….இல்லை அவர்களை நீங்கள் என்னசெய்ய போகிறீர்கள் என்று,நான் தங்களை நோக்கி கேட்டால்,தங்கள் பதில் என்னவாக இருக்கும்,சகோதரரே?
இதே நிலை இஸ்லாத்துக்கும்,இஸ்லாமியர்களான எங்களுக்கும், பொருந்தும்,
ஏதோ முஸ்லிம்கள் எல்லாம்,அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற தங்களது பார்வை,தவறானது…இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் இந்தியர்களே,அவர்கள் சார்ந்துள்ள மார்க்கம் இஸ்லாம்,தாங்கள் ஹிந்து மதத்தை சார்ந்துள்ளது போல,அவ்வளவே….
மற்றபடி,தேசப்பற்று,ஒருமைப்பாடு,நாட்டுநலன்,இவற்றில் யாரும் யாருக்கும்,குறைந்தவர்கள் அல்ல….
சகோதரரே,இத்தனை விஷயங்களும்,நான் இங்கு,பதிந்ததற்கான காரணம்,இஸ்லாமிய பெயர்தாங்கிகளால்,செய்யப்படும்,வன்முறையை ஒரு போதும் நியாயப்படுத்த அல்ல…..
குற்றம் யார் செய்தாலும்,தயவு தாட்சண்யம் இன்றி தண்டிக்கப் பட வேண்டும்.
இது தான் எனது நிலைப்பாடு,நான் சார்ந்துள்ள மார்க்கமும் ,அதையே சொல்கிறது….
யாருக்காகவும் நானோ,நான் சார்ந்துள்ள மதமும் பொருப்பேற்க முடியாது…இது ஹிந்துக்களுக்கும் பொருந்தும்…
நாம்,நமது நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும் அவ்வளவே…..
நன்றி..
அன்புடன்
ரஜின்

செவ்வாய், அக்டோபர் 13, 2009

செல்லகிளி அவர்களுக்கு பதில்....

கருத்துகள் இல்லை :

அன்புள்ள செல்லகிளி அவர்களுக்கு,
நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்...ஆனால் நீங்கள் இதற்கு இவ்வளவு மெனக்கட்டு,குர் ஆன் வசனத்தை எல்லாம் மற்றி எழுதி,எனக்கு விளங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் எண்ணுகிறேன்...தாங்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விக்கு,இதோ பதில்..... 


தாங்கள் சொல்ல வந்தது,
குர் ஆனில்,(மாற்று மதத்தவர்களுடன் போர் புரியும் போது அவர்களை வெட்டுங்கள்,என சொல்வது போல்,பிற மத வேதங்களில்,முஸ்லிம்களை பற்றி சொல்லப் பட்டு இருந்தால்..அதை நீங்கள்(அதாவது என்னை) பாராட்டி வரவேற்பீர்களா?.....இது தானே...


இதுக்கு ஏங்க,அவ்வளவு தூரம் போகனும்...இஸ்லாமே அத தான் சொல்லுது.....
முதலில் ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்....


இஸ்லாத்தில் போர்:


இஸ்லாத்தில் போர் ஆனது,அடிப்படையாக,சில காரணிகளை கொண்டு அமைகிறது...
1. இஸ்லாதிற்கு எதிராக சூழ்ச்சி,செய்து,முஸ்லிம்களை அழிக்க நினைப்பவர்களுடன் போர்.
2. ஒரு சமூகத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள்,பெரும்பான்மையினரால்,பாதிக்கப்படும் போது,அவர்களை சகமுஸ்லிம்,எனும் அடிப்படையில் காக்கும் பொருட்டு,அவர்களுடன் போர்.
3.மற்ற சில காரணங்கள்,அக்கால அரசுகள்,கொண்டிருந்த காரணங்களுடன் பொருந்தக் கூடியதாகவே அமையும்.(உதாரணம்.ஒரு நாட்டின் செய்தியை,எடுத்து செல்லும்,தூதுவனை,பிற நாட்டினர்,கொன்றுவிட்டால்,கொன்றவர்கள்,தூதுவனின் நாட்டினறை பகிரங்கமாக போருக்கு அழைப்பதற்கு சமம்.)


(இந்த காரணங்களுக்கு உரியவர்களாக முஸ்லிம்கள் இருந்தால்,முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்கு,மற்றவர்களுக்கு எந்த தடையும் இல்லை....அப்படி மற்ற மதவேதங்களில் குறிப்பிட்டு இருந்தாலும்,அதை எற்றுக்கொள்வோம்.)


இப்படிப்பட்ட காரணங்களுக்குரியவன்,நிச்சயம் முஸ்லிமாக இருக்க முடியாது...


சரி...
இப்படிப்பட்ட காரணிகளால் தூண்டப்பட்டு முஸ்லிம், ஒரு சமூகத்தின் மீது போர் தொடுக்க செல்லும் போது,அவர்களிடம் ஒரு நிபந்தனை முன்வைக்கப்படும்.
எதிரிகளை நோக்கி நீங்கள்,அல்லாஹ்வையும்,அவனது தூதரையும்,ஏற்றுக்கொண்டால்,போர் தவிர்க்கப் படும்.ஏற்க மறுத்தால்,முஸ்லிம்கள்,போர் புரிய வந்த காரணத்தின்,அடிப்படையில்,நீங்கள் கீழ்படிந்து,ஜிஸ்யா செலுத்தும் வரையில்,அவர்களுடன் போர் புரிவோம் என்பதாகும்.....


வரி...இஸ்லாத்தில்,இரண்டு வகை மட்டுமே....
ஒன்று,ஸகாத்(ஏழை வரி),இது இஸ்லாத்தை ஏற்றவர்கள் மீது கட்டாயக் கடமை....
மற்றது..ஜிஸ்யா(பாதுகாப்பு வரி),இது இஸ்லாத்தை ஏற்காதவர்கள்,இஸ்லாமிய ஆட்சிக்குபட்டு  இருந்தால்,அவர்கள் மீது விதிக்கப் படுவது....


இவர்கள் ஜிஸ்யா தர மறுத்தால்,அவர்களுடன் போர் புரிய இஸ்லாம் சொல்கிறது... 


ஸகாத்.
இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்று...
ஒரு முஸ்லிமின்,சராசரி ஆண்டு வருமானம்,நிணயிக்கப்பட்ட அளவை தாண்டும்போது,அவர் ஸகாத்,கொடுக்க கடமைப்படுகிறார்.
அப்படி கடமைப்பட்டவர்,அதை தர மறுக்கும் போது,அவர்களுடனும் போர் புரியவேண்டும்,என்பதை கீழே பதியப்பட்ட ஹதீஸ் உறுதி செய்கிறது.


நபி (ஸல்) அவர்கள் மரணித்து,அபூபக்கர் (ரலி) (ஆட்சிக்கு)வந்ததும்,அரபிகளில் சிலர்,(ஸகாத்தை மறுத்ததின் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர்.(அவர்களுடன் போர் தொடுக்க)அபூபக்கர் (ரலி) தயாரானார்.உமர்(ரலி),'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியவர்,தன்  உயிரையும்,உடமையயையும் என்னிடம் இருந்து காத்துக்கொண்டார்,தண்டனைக்குறிய குற்றம் புரிந்தவரைத்தவிர,அவரின் விசாரணை அல்லஹ்விடமே உள்ளது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது,நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும் என்று கேட்டார்.அபூபக்கர்(ரலி), உமரை(ரலி) நோக்கி அல்லாஹ்வின் மீது ஆணையாக,தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்து பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன்.ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்,
அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களிடம்,(ஸகாததாக)வழங்கி வந்த  ஓர் ஒட்டக குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட,அதை மறுத்ததற்காக இவர்களுடன் நான் போரிடுவேன்,என்றார்.இது பற்றி உமர் (ரலி) அவர்கள்,அல்லஹ்வின் மீது ஆணையாக! அபூபக்கரின் இதயத்தை(தீர்க்கமான தெளிவை பிரும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார்.அவர் கூறியது சரியானது தான் என நான் விளங்கிக் கொண்டேன்.என்றார்.
ஸஹீஹுல் புஹாரி: 2:1399,1400


இதுவல்லாத,இன்ன பிற,கடுமையான ஷரீஅத்,சட்டங்களும் இஸ்லாமியர்களுக்கு தானே....
அவர்களின் தவறுக்கு,தண்டனை தரும்,உலகின் கடுமையான சட்டங்கள் தானே அவை....


இஸ்லாம்,மற்ற மக்கள் மீது போர் தொடுத்து,அவர்கள் தனது ஆட்சியின் கீழ் வரும் போது,அவர்களிடம்,ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டாயமாக வசூலிக்கிறது.
அதனைக் கொண்டு,அவர்களின் உயிர் உடமைக்கு உத்திரவாதம் அளிக்கிறது...
அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது,அவர்களுக்காக போரிடுகிறது.
-----------------


மேற்கண்ட காரணங்களுக்கு உரியவர்களாக முஸ்லிம்கள் இருந்தால்,முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்கு,மற்றவர்களுக்கு எந்த தடையும் இல்லை....அப்படி மற்ற மதவேதங்களில் குறிப்பிட்டு இருந்தாலும்,அதை எற்றுக்கொள்வோம்.


நன்றி,


அன்புடன்
ரஜின்

வெள்ளி, அக்டோபர் 09, 2009

ரஹ்மத்துல்லாஹ் - பதில் 03

கருத்துகள் இல்லை :

ரஹ்மத்துல்லா எழுதியது...
8 October 2009 at 7:04 pm



  1. //”வேதம் அருளப்பெற்றவர்களில்(யூத,கிறிஸ்தவர்கள்) எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ” (அப்படீன்னா…ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்). அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.(”கப்பம் கட்டும் வரை”அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்)” 9:29
    இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்று மதத்தினர் மீது,ஜிஸ்யா எனும் வரிவிதிப்பு உண்டு..அதை அவர்கள் செலுத்தாத வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்ன்னு அல்லாஹ் சொல்கிறான்.//
    சகோதரர் ரஜின் அவர்களே, எந்த இடத்தில்
    ”இஸ்லாமிய ஆட்சிக்குள் இருக்கும் மாற்றுமதத்தினர்” என்ற வார்த்தை இந்த வசனத்தில் இருக்கிறது? நீங்களாக இட்டுக்கட்ட ஆரம்பித்துவிட்டீர்களா?
    ம்ம் இதில் இட்டுகட்ட என்ன இருக்கிறது....
    //[கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்]//
    ஜிஸ்யா மாற்று மதத்தினர் கட்டாம,முஸ்லிமான?? ??   நீங்களா கட்டுவீங்க?.....
    புரியாதவங்களுக்கு,விளக்கலாம்,புரியாதமாதிரி நடிக்கிரவங்களுக்கு....ம்ம் முடியாத காரியம் தான்....
    ஜிஸ்யாவுக்கு மட்டும் தான் போர்புரிய சொல்லுது...
    (இந்தியாவுல வரி யேய்ப்பு செய்ரவங்கள என்ன செய்வாங்க....தனிமனிதனா இருந்தா கைது,சமூகமா இருந்தா,அடக்கி கட்டவைப்பார்கள்...அது தான்...இஸ்லாமும் சொல்லுது..)
    நீங்கள் சொல்வது போலத்தான் வசனம் இருந்தால், ஏன் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமை ஒப்புக்கொள்ளாத மற்ற நாடுகள் மீது படையெடுத்து இஸ்லாமை ஒப்புக்கொள்ள செய்தார்கள்?
    அடப் பாவிங்களா?....இஸ்லாம்,வாளால்,பரப்பபட்டது,அததானே, சொல்ல வர்ரீங்க?...
    ம்ம்ம் இன்னக்கி இப்படித்தான்,உலகம் முழுவதும் ஊடகங்களாலும்,யூத கிறிஸ்தவர்களாலும்,பரப்ப படுகிறது......
    இந்த மாதிரி, இஸ்லாத்த எடுத்துவைக்க,மார்க்கமும் சொல்லல,அப்படிதான் பரப்பபட்டது,என்பதற்கு, வரலாற்று ஆதாரமும் இல்ல.....சும்மா மார்க்கத்தில் பேரால்,இட்டுக்கட்டாதீங்க....
    அப்படி கட்டாயத்தின் பேரால் வாளுக்கு பயந்து இஸ்லாத்தை ஏற்பவர்களிடம்,ஈமான் இருக்காது.... 
    ஈமான்கிற நம்பிக்கை இல்லாதவன,இஸ்லாமியன்னு இஸ்லாம் சொல்லல,,இல்லயா..அவனுக்கு பேரு முஸ்லிம் இல்ல,முனாஃபிக்...இதுவாவது தெரியுமா?
    இந்தியாவ எடுத்துகிட்டா.இங்க 200 ஆண்டுகளுக்கு மேலா இஸ்லாமிய?? ஆட்சி இருந்துச்சு,ஆனா அதில் பெருவாரியான அரசர்கள்,நீங்க சொன்னமாதிரி,வாளாலும் சரி,சும்மா கூட இஸ்லாத்தை பரப்பவில்லை...அவர்கள் அனைவரும் சுகபோக வாழ்வு வாழ்ந்தார்கள்...
    அக்பர் போன்ற அரசர்கள், ஹிந்துக்களுடன்,நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்...
    அதற்கு சாட்சி.இன்றைய இந்தியா....இங்கு பெரும்பான்மையினர்,ஹிந்துக்கள்....இது ஒன்று போதாதா ஒங்க பிரச்சாரம் பொய்ன்னு நிரூபிக்க....
    //கப்பம் கட்டும் வரை”அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்//
    இப்போது உலகத்தின் இந்துக்களும் கிறிஸ்துவர்களும் யூதர்களும் முஸ்லீம்களுக்கு கப்பம் கட்டுகிறார்களா? அவர்கள் கட்டும் வரைக்கும் ஜிஹாத் புரியவேண்டியது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை.
    ஓ ....நீங்கதான் நம்ம இந்தியாவின் மாமன்னர் ரஹ்மத்துல்லாவா?....எனக்கு தெரியாம போச்சு???
    நா வந்து,இந்தியாவுல காங்கிரஸ் ஆட்சி நடக்குதுன்னு நெனச்சுகிட்டு இருக்கேன்.....
    ஒங்க ஆட்சியில யாருமே ஜிஸ்யா(பாதுகாப்பு வரி) கட்டலயா???....அடடா////
    ரஹ்மத்துல்லா,சும்மா அரவேக்காட்டு தனமா பேசிகிட்டு இருக்காதீங்க.......
    சகோதரர் ரஜின் அவர்களே கீழே பாருங்கள். இது இஸ்ரேலின் புத்திரர்களுக்கு அதாவது யூதர்களுக்கு அருளியது என்று தெளிவாக அல்குரான் குறிப்பிடுகிறது.
    சூரா - அல் மாயிதா
    அத்தியாயம் – ஐந்து
    வசன எண் - 32

    இதன் காரணமாகவே, ”*நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப்பதிலாக அல்லது புமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காக) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான்*. மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழவைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைப்பவரைப் போலாவார்.என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களினடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். இதன்பின்னரும் அவர்களின் பெரும்பாலோர் புமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
    நீங்கள் சொல்வது உண்மையென்றால், இதில் ”எல்லோருக்கும் விதித்தோம்” என்றல்லவா சொல்லியிருப்பான். இங்கே தெளிவாக இஸ்ரேலின் புத்திரர்களுக்கு விதித்தோம் என்று சொல்லியிருக்கிறான் அல்லாஹ். யாரிடம் காது குத்துகிறீர்கள்.
    சகோதரரே??...
    இது சம்பந்தமா நான் எனது முந்தய பின்னூட்டத்தில் கொடுத்த பதில் போதுமானது....


    {அடப்பாவிங்களா…குர் ஆனே பொதுவா எல்லாத்துக்கும்,குறிப்பா முஸ்லிம்களுக்கு அருளப்பட்டது..அதுல உள்ள வசனம் யூதர்களுக்கா?…நல்ல கதையா இருக்கு..
    சரி நீங்க சொல்ர மாதிரி யூதர்களுக்குன்னா,அவங்களுக்கு அருளப்பட்ட வேதமும்(தோரா) அல்லாஹ் இறக்கியது தானே…அந்த வேதத்தை,ஈமான் கொள்ளாதவர் முஸ்லிம் இல்லையே….
    தாங்கள் எப்படி?????}
    குர் ஆன்ல உள்ள ஒரு வசனம் யூதர்களுக்கு,என்று,உங்களின் மேதாவித்தனத்தின்?? மூலம் முதல்முறை அறிகிறேன்...........



    நீங்கள் சொல்வது உண்மையென்றால், இதில் ”எல்லோருக்கும் விதித்தோம்” என்றல்லவா சொல்லியிருப்பான். இங்கே தெளிவாக இஸ்ரேலின் புத்திரர்களுக்கு விதித்தோம் என்று சொல்லியிருக்கிறான் அல்லாஹ். யாரிடம் காது குத்துகிறீர்கள்.
    ம்ம்ம் அப்படிப்பார்த்தால்,அல்லாஹ் பெருவாரியான வசனங்களை,நபியே!(ஸல்) என்று,நபியை பார்த்து,தான் சொல்கிறான்,
    மக்காவாசிகளே,நபியின் மனைவியரே,என பல இடங்களில்,அல்லாஹ்,குறிப்பிட்டு சொல்கிறான்,
    அப்ப இத எல்லாம் பிரிச்சுட்டு பாத்தா?............


    முதல் மற்றும் கடைசி அட்டைதான் குர் ஆனில் மிஞ்சும்????
    இதல்லாம்...யாரு ஒங்களுக்கு பாடம் எடுக்குரா???? 


    “உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு” இது எப்போது அருளப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு? முஸ்லீம்களின் பிள்ளைகளை மற்ற மததினராக்கக்கூடாது என்பதற்காக இறக்கப்பட்ட வசனம் அது. சற்றே ஹதீஸ் படித்துப் பாருங்கள்.


  2. ஏங்க...ஹதீஸ்ல இருக்கா?....நீங்க படிச்சுருக்கீங்களா?....அப்டீன்னா......அத அப்ப்டி இங்க பதிஞ்சுருக்கலாமே????
...........................................................................................................................................................................................................................
உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ். இந்த மாதிரி ஆட்களிடமிருந்து நீங்கள்தாம் உங்கள் மார்க்கத்தை மீட்பிக்க வேண்டும். ஒன்று தெரிகிறது.. உங்கள் இறைவன் இறக்கியதாக நீங்கள் சொல்லும் புத்தகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கிறது போல. ரொம்பவும் தெளிவாகவே சொல்லியிருக்கிறோம் என்று சொல்லப்பட்டிருந்தாலும். இன்னும் கொஞ்சம் தெளிவாக இந்த வஹீ வந்திருக்கப்படாதா!


நன்றி,ஜெயராமன்...


இவங்களுக்கே..இன்னும் நிறையா விளக்கவேண்டி இருக்கு....
வஹீ பத்தி சொன்னீங்க.....ஒரு சாதாரண பாட புத்தகத்த ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள்,ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளும் விதம் வேறு...இல்லயா....இது இறைவேதம்...அல்லாஹ் இது குறித்து ஆராய்ந்து பார்க்க தான் சொல்ரான்...அதுவல்லாது....அதன்படி,வாழ்ந்துகாட்டிய நபியவர்களின் வாழ்க்கை அதை புரிந்துகொள்ள போதுமானது.... 


அன்பரசனின் விளக்கம் சொல் மண்டி இரா அவர்களுக்கு போதுமானது...





இங்கே எழுதியிருக்கும் இஸ்லாமிய நண்பர்களது பின்னூட்டங்களை தயவு செய்து நீக்கிவிடுங்கள்.
அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய வேறு நிறைய இடங்கள் இருக்கின்றன.
அன்பரசன் அவர்களே......இஸ்லாத்தை பத்தி தாங்கள் பதிவு வெளியிடும் போது,அதற்கு,பின்னூட்டம் இடும் உரிமையைக் கூட எனக்கு தர மறுக்கிரீர்களே?....
இஸ்லாம் பற்றி,தங்களது புரிதலை,பதிவாக வெளியிடுகிறீர்கள்..(சரியோ தவறோ) நான் வரவேற்கிறேன்.....
ஆனால் அது சரியெனில்,வாழ்த்தவும்,அது தவறெனில்,சுட்டிக்காட்டவும்,விளக்கவும்,தேவையான குறைந்த பட்ச உரிமையை எனக்கு தாருங்கள்............


நன்றி




அன்புடன்
ரஜின்



வியாழன், அக்டோபர் 08, 2009

ரஹ்மத்துல்லா - பதில் 02

கருத்துகள் இல்லை :
இங்கு அவர் என்னை நோக்கி எழுப்பிய கேள்விகளுக்கு நான் பதில் தர வேண்டியுள்ளதால்,அவரது பதிவை சிவப்பு வண்ணத்திலும்,எனதை கருப்பிலும் பதிந்துள்ளேன்..


ரஹ்மத்துல்லா எழுதியது....
7 October 2009 at 6:31 am

அல்லாஹ்வின் வழியை முஸ்லீம்களுக்கே தெளிவுபடுத்த வேண்டிய தேவையை சகோதரர் ரஜினின் மறுமொழி சுட்டிக்காட்டுகிறது.
தீவிரவாதம் செய்பவன் முஸ்லீம் அல்லதான். ஆனால், முஸ்லீம்கள் செய்வது தீவிரவாதம் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
பரிதாபத்துக்குரிய ரஜினின் பதிலை பார்த்து பரிதாபப்படாமல் என்ன செய்வது? அது எக்காலமும் முஸ்லீம்களுக்கு தைரியமூட்ட கொடுக்கப்பட்டது. பத்ரு போருக்கு மட்டுமான வசனம் என்றால் அது ஏன் நிரந்தரமான அல்குரானில் இடம் பெற்றுள்ளது? வெற்றி என்றும் முஸ்லீம்களின் பக்கமே என்று அல்லாஹ் இங்கே தெளிவாக்குகிறான். முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அல்லாஹ்வே முஸ்லீம்களின் அருகே நின்று போர் புரிய மலக்குகளை அனுப்புகிறான்.
உண்மைதான் ரஹ்மத்துல்லாஹ்,இது பத்ரு போரின்போது அந்த வசனம் இறக்கப் பட்டாலும்,இது முஸ்லிம்கள் "போர் புரியும்"(வன்முறை அல்ல) எல்லா காலத்துக்கும் பொருந்தும்...சரிதான்.ஆனால் இந்த வசனத்தை கையாள நீங்கள் போர் அல்லவா புரியவேண்டும்...
ஈராக்கில்,அமேரிக்காவுக்கு,எதிராகவும்,பாலஸ்தீனில்,இஸ்ரேலுக்கு எதிராகவும்,நீங்கள் நிற்கும் போது இந்த வசனத்தை கையில் எடுத்துகொள்ளுங்கள்.....
மாராக,இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தப்படும்,பொது மக்கள் மத்தியிலான குண்டு வெடிப்பு,மும்பையில்,சமீபத்தில் தாஜ் ஹோட்டல்,நரிமன் ஹவுஸ்,ரயில் நிலையம் பொன்றவற்றில் நடந்த கொலைவெறித்தாக்குதல்களுக்கு,நீங்க ஜிஹாதுன்னு பேரு வச்சுகிட்டு,யாரோட போர் பொரியுரீங்க சார்....ஏதும் அறியாத அப்பாவி மக்களோடயா?...
//அக்காலத்தில் முஸ்லிம்களுடன் எதிரிகள் நடத்திய போர்கள் அனைத்தும்,நாட்டை கைப்பற்றவோ,அல்லது,செல்வத்திற்க்காகவோ,அல்ல…//
//முஸ்லீம்களின் எதிரிகள் நாட்டை கைப்பற்றவோ அல்லது செல்வதுக்காகவோ போர் புரியவில்லை. அவர்கள் சாத்தானின் பக்கத்திலிருந்து போர் புரிகிறார்கள். ஆனால், அல்லாஹ்வின் ஜிஹாதுக்காக போர் புரிகிறார்கள்.//
ஆமா சார்.. அப்பொ முஸ்லிம்களுடன் எதிரிகள் நடத்திய போர்கள் அனைத்தும்,நாட்டை கைப்பற்றவோ,அல்லது,செல்வத்திற்க்காகவோ,இல்ல,அததான்,நா சொன்னேனெ...
அது இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரான போர்தான்..அதனால் தான் அல்லாஹ்,எதிரிகளை குறித்து சொல்லும் போது நிராகரிப்போர் என்று குறிப்பிடுகிறான்...
//”வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.” 9:29
எதுவரையிலும் ஜிஹாத் என்பதற்கு மேற்கண்ட இறைவசனத்தை விட வேறென்ன ஆதாரம் வேண்டும் சகோதரர் ரஜின் அவர்களே?//
ம்ம்ம்...அந்த வசனத்த...நீங்களே கண்ண நல்லா தொரந்து ஒரு தடவ,இல்ல... ரெண்டு தடவ படிச்சு பாருங்க... 
வேதம் அருளப்பெற்றவர்களில்(யூத,கிறிஸ்தவர்கள்) எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ"(அப்படீன்னா...ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்). அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.("கப்பம் கட்டும் வரை"அப்டீன்னா,கட்டீட்டா வுட்டுடுங்கன்னு தானெ அர்த்தம்)” 9:29
இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருக்கும் மாற்று மதத்தினர் மீது,ஜிஸ்யா எனும் வரிவிதிப்பு உண்டு..அதை அவர்கள் செலுத்தாத வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்ன்னு அல்லாஹ் சொல்கிறான்..  
அல்லாஹ்வுடய வார்த்தையயை ஒங்களுக்கு ஏத்தமாதிரி வளைக்காதீங்க சார்....
உமர் (ரலி)அறிவித்தார்.
(எனக்கு பின் வருகிற புதிய) கலிஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன்.அல்லாஹ்வின் பொருப்பிலும்,அவனுடய தூதர் (ஸல்) அவர்களின் பொருப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.அதன்படி அவர்களை பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்.அவர்களின் சக்திக்கேற்பவே தவிர(ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) அவர்கள் மீது சுமத்த கூடாது.
ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்:3052
இது என்ன சொல்லுதுன்னு பாத்தீங்களா?...முஸ்லிம்கள் பொருப்பில் உள்ள மாற்றுமதத்தவர்களுக்காக முஸ்லிம்கள் போரிடனும்னு சொல்லுது...
ரஹ்மத்துல்லா,உங்களது புரிதல் படி:"ஒங்க பொருப்புல இருக்குரவங்கள மொதல்ல கொல்லுங்கன்னுல மார்க்கம் சொல்லனும்"...அவங்களும் நிராகரிப்பாளர்கள் தானே....
மாறா அவங்கள பாதுகாக்க சொல்லுது....இது தான் இஸ்லாம்...புரியுதா?
//இறைஅருளால் அந்த போர்களில் வெற்றி கண்டு,அன்று வரை இல்லாத ஒரு புது சமூக கட்டமைப்பை உருவாக்க முனையும் போது,கிளர்ச்சியில் ஈடுபடும் சில கூட்டத்தினரை எச்சரிக்க படைகள் அனுப்பபட்டன….
அவர்கள் தன்னுடய நிலையிலேயே(குழப்பம் செய்வது) நீடிக்க முயலும் போது,அவர்கள் மீது போர் தொடுப்பது கட்டாயம் ஆகிரது//
யார் இலலை என்று சொன்னது சகோதரர் ரஜின் அவர்களே? இன்றும் அதே நிலைதானே நீடிக்கிறது? இன்று உலகத்தில் ஒரு புது கட்டமைப்பை உருவாக்க அல்லாஹ்வின் வழியில் நிற்கும் முஸ்லீம்கள் தொடர்ந்து முயற்சி செய்துதான் வருகின்றனர். அது உருவாகிவிட்டதா? உலகெங்கும் இஸ்லாமின் ஆட்சியில் வரும் வரைக்கும் என்ன செய்யவேண்டும் எனப்தைத்தான் 9.29 கூறுகிறது.
அப்படியா?....அப்போ ஒரு போர் பிரகடணம் செய்யுங்க....போருக்கு வர்ரவங்கள கொல்லுங்க...யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்..
ஏதும் அறியாத மக்கள் என்ன செஞ்சாங்கன்னு அவங்க மீது ஒங்க கோவம்...அவங்களாலதான்,ஒங்கள திரும்ப தாக்க முடியாதுன்னா?
//இல்லை சகோதரர் ரஜின் அவர்களே..
அவர்களும் காபிர்களைச் சார்ந்தவர்களே என்று நபி(ஸல்) அறிவுறுத்தியுள்ளார்.
இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களேஎன்று பதிலளித்தார்கள். (நூல்கள் - புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)
ம்ம்ம் இந்த வசனத்துல,அவங்கள தாக்கலாம்னோ,அல்லது கூடாதுன்னோ சொல்லல...சரிங்களா.....நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க.....
இத பாருங்க...
அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு அங்கு இரவு நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.அவர்கள் ஒரு சமுதாயத்தின் மீது இரவு நேரத்தில் படையெடுத்து செல்வார்களாயின்,காலை நேரம் வரும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள். 
ஸஹீஹுல் புஹாரி:பாகம் : 3,ஹதீஸ் எண்:3945
இது தான் போருக்கான முறையான ஹதீஸ்..சும்மா,எதயாவது எடுத்துவச்சு,ஒலராதீங்க....
//கஜ்வா என்னும் திடீர் தாக்குதலில் பெண்களும் சிறுவர்களும் இறப்பது தவிர்க்கமுடியாதது. இருபுறமும் அறிவித்து செய்யும் போரில்தான் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அறிவுறுத்தியுள்ளார்//.
இது என்ன ஒங்களோட சொந்த ஃபத்வா வா?...இப்படித்தான் ஊருக்குள்ள பலபேர் இஷ்டத்துக்கு,ஏதோ மிட்டாய் கொடுக்குர மாதிரி,ஃப்த்வா கொடுத்துகிட்டு திரியுராங்க....
//,இது போன்ற ஒரு புதிய சமூகத்தை நீங்கள் அமைக்க முனைந்தால்,வரும் பிரச்சனைகளை தீர்க்க (திணிக்கப்பட்ட) சில போர்கள் நீங்கள் செய்வது அவசியம் என உணர்வீரகள்//
அதனைத்தான் நானும் சொல்கிறேன்.
//இது எல்லாவற்றிகும் மேலாகஇறைவன் கூருகிறான்..
எவன் ஒருவன் அநியாயமாக ஒருவனை கொலை செய்கிரானோ, அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம்இன்னும் எவன் ஒருவன் ஒருவனை காரணமின்றி அநியாயமாக கொல்கிறானோ,அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம் என்று
கொலை இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்று….//
இல்லை சகோதரர் ரஜின் அவர்களே. அந்த வரி அல்லாஹ்வால் யூதர்களுக்கு அருளப்பட்டது. அது யூதர்களுக்கு அருளப்பட்டது என்றுதான் அல்குரானிலும் இடம் பெற்றுள்ளது. அது முஸ்லீம்களுக்கு அருளப்படவில்லை.
அடப்பாவிங்களா...குர் ஆனே பொதுவா எல்லாத்துக்கும்,குறிப்பா முஸ்லிம்களுக்கு அருளப்பட்டது..அதுல உள்ள வசனம் யூதர்களுக்கா?...நல்ல கதையா இருக்கு..
சரி நீங்க சொல்ர மாதிரி யூதர்களுக்குன்னா,அவங்களுக்கு அருளப்பட்ட வேதமும்(தோரா) அல்லாஹ் இறக்கியது தானே...அந்த வேதத்தை,ஈமான் கொள்ளாதவர் முஸ்லிம் இல்லையே....
தாங்கள் எப்படி?????
ரஹ்மத்துல்லாஹ்,
மற்ற மதத்தினரையும்,மதங்களையும் சாடுவது,வெறுப்பதையும் வேலையாக கொண்டு திரியாதீங்க..முதல்ல நீங்க சார்ந்து இருக்கும் மார்க்கத்த முழுமையா தெரிஞ்சுகொங்க.....
"உங்கள் மார்க்கம் உங்களுக்கு,எங்கள் மார்க்கம் எங்களுக்கு"  இந்த ஒரு வசனம் போதாதா,நீங்க புரிஞ்சுக்க????????????
இது எனது வளைபூவிலும் பதியப்பட்டுள்ளது.ரஹமத்துல்லாஹ்,அங்கேயும் பதில் தரலாம்...
நன்றி
ரஜின்

Counter

பிற பதிவுகள்