மதம் என்பது வெளிப்படையான வழிபாடு,சடங்குகள்,மற்றும் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.அது நம்பிக்கை சார்ந்த ஒன்று,எந்த ஒரு கட்டாயமும் இன்றி மனம் அதை ஏற்கும் பொழுது,அங்கு மதம் உயிர் பெருகிறது.கட்டாய தினிப்பு மற்றும் கடுமையான கொள்கையானது ஒரு மதத்தை உயிர் கொள்ளச் செய்யாது,மாறாக அதன் மீதான தவறான எண்ணங்கள் வழுப்பெற்று,அங்கெ மதம் தோல்வியுறுகிறது.
இதன் மூலம் மதம் என்பது மனம் சார்ந்த ஒன்று என்பது தெளிவு.இந்த பதிவானது மதம் என்ற தலைப்பில் மனங்களை அலசுவதால்,இது மதம் சார்ந்த பதிவென்பதை விட,மனம் சார்ந்த பதிவாகக் கொள்ளலாம்.
மதம்:மனித வாழ்கையில் மதம் என்பது பிரிக்கவியலாத காரணியாகும்.அது மனித வாழ்க்கைக்கு தேவையான நெறிகளை வகுத்து,நன்மை தீமையை பகுத்து ,அவனது வாழ்வை சீர் செய்துகொள்ள பயன்படுகிறது.
மதம் என்ற ஒன்றை பயன்படுத்தாது,தனது வாழ்வை அமைத்துக் கொள்பவர்களும் உலகில் இல்லாமல் இல்லை.அவர்கள் நாத்தீகர்கள்,அதாவது கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்போர்.அவர்கள் உலகின் மொத்த மக்கள் தொகையில் வெகு சொற்பமேயாகையாலும்,நாத்தீகம் இக்கட்டுரையின் பேசுபொருள் அல்ல என்பதாலும்,உலகின் பெரும்பான்மை மக்களின் மனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் மதம் மற்றும்,மதமாற்றம் சார்ந்த விடயங்களை இந்தப் பதிவில் அலசுவோம்.