சனி, ஏப்ரல் 28, 2012

பர்தா என்ன சாதித்துவிட்டது??? – 04 (அதில்லம்மா)

9 கருத்துகள் :


ராதிகாவோ...விவாதித்த அனைத்தையும் ஒரு கணம் யோசித்தவளாய்... இருக்குப்பா ஆனா இல்ல என்றாள்...(பாகம் 03)

இதென்ன...சினிமா டயலாக்லாம் விட்டுட்டு இருக்க... சொல்லு.. இருக்கா? இல்லையா? என விளையாட்டாய் கடிந்துகொண்டாள்...

ப்ச்...ஹதி...நான் சொல்லவந்தது..இன்னும் அப்படியான சில உடைகள் இருக்கு,ஆனா அவை தற்கால உபயோகத்திற்கு தக்கவாறு பொலிவு பெறாததால,அவை ஓல்ட் ஃபேஷன் கேட்டகிரிக்கு போயிடுச்சு...அதத்தா புத்திசாலித்தனமா சொன்னேன்..உனக்கு புரியல...என ராதிகா  கிண்டலாய் சீண்டினாள்..

ஹதிஜா..சிரிப்பை பாவனையில் காட்டிவிட்டு,அங்கலாய்ப்புடன்...ஹ்ம்ம், ஆமாப்பா நீ சொல்றது சரிதான்....சில சுடிதார் வகைகள்,அப்ரம் பாட்டியாலா போன்ற ட்ரெஸ்லாம் ஓரளவு இந்த வரைமுறைக்குள்ள வரும்...ஆனால் அதுகள்ளையும் ஃபேஷன் புகுந்து இப்போ முறையான சுடிதார்கள் கூட கெடக்கிறதில்ல...அப்டி ஒரு முழுமையான ட்ரெஸ்ஸ் இல்லாததாலதான இது என தன் பர்தாவை காட்டினாள்...

திங்கள், ஏப்ரல் 23, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 03 (இருக்கு ஆனா இல்ல)

16 கருத்துகள் :
பாகம் 01 , பாகம் 02

ராதிகாவோ..தன் நீண்ட அமைதியும்,பதில் பேசாமலிருப்பதும்,தான் பர்தாவின் கூற்றை ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டோமோ,என சுதாரித்து...உடம்ப மறைக்கிறெதெல்லாம் சரி..ஆனா அவங்கவங்க போட்டுக்கிற ட்ரெஸ்ஸ அவங்க தேர்வு செய்ய உரிமை இருக்கு... இதுதா என்னோட கருத்து.இதுல எந்த மாற்றமும் இல்ல..என தன்னை அந்தக் கருத்தில் இருந்து மீட்டுக்கொள்ள முயன்றாள்...(பாகம் 02)

ரொம்ப சரியா சொன்ன ராதி.. நிச்சியமா என்னோட கருத்தும் அதுதான்.நம்ம ட்ரெஸ்ஸ நாம தேர்வு செய்ய முழு உரிமை நமக்கே.. சரி நீ உன்னோட ட்ரெஸ்ஸ தேர்வு செய்யிர, நல்லதாவே... ஓக்கெ... அதேமாதிரி நம்ம ஃபேஷன் குயினையும், அவங்க விருப்பத்துக்கே ட்ரெஸ் செலக்ட் பண்ண சொல்லிடலாமா? என அவர்களது வகுப்பிற்கு வரும் ஒரு ஆசிரியை குறித்துக் கேட்டாள் ஹதிஜா.. உனக்கு ஏண்டி இந்த வம்பு? அவங்க போடுரதெல்லா ட்ரெஸ்ஸா?? அந்தந்த ப்ரொஃபஷன்க்குன்னு ஒரு மரியாத இல்லயா? என ராதிகா மறுதலித்தாள்...ஏன்? என்ற ஹதிஜாவின் கேள்விக்கு, ஆசிரியர் பணி புனிதமானது, அவக இந்த வேலைல இல்லைன்னா, என்னவேண்ணா போட்டுக்கலாம்.. என்றாள் யோசனையாய்...

சனி, ஏப்ரல் 21, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 02 (10% வேறுபாடு?)

28 கருத்துகள் :
முந்தைய பாகத்தை படிக்க: க்ளிக் செய்யுங்கள் பாகம் 01 


ஹதீஜா - ராதிகா 

ஹதிஜா மௌனப்புன்னகையுடன் ராதிகாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. கோவம் தணிந்து வருத்தம் மேலிட..ஸாரிடி...இருந்தாலும் நீ இப்டி பண்ணிருக்ககூடாது என நிதானமானாள் ராதிகா..இந்த சமயத்துக்காய் காத்திருந்தவள்போல் ஹதிஜா பேசத்துவங்கினாள்... (முதல் பாகம்)

ராதிகாவை இயல்புநிலைக்கு கொண்டுவர,.. ஹதிஜா, பொய்சிரிப்போடு... ராதி...ஏய், ப்ச், இங்க பார்டி... இன்னக்கி ஒருநாள் போடாம இருந்தா என்னான்னு கேக்குற... இது நாங்க போடுர யூனிஃபார்ம்ன்னு நெனச்சிக்கிட்டியா என்ன? இன்னைக்கி லீவுதானே, வேர போட்டா என்னான்னு கேக்க??...என்றதும்,... இல்லப்பா அப்டில்லா நெனைக்கல,என ராதிகா சிறு தவிப்புடன் பதிலளித்தாள்... தொடர்ந்து ஹதிஜா....அப்படியா? சரி! அப்போ பர்தா எதுக்காக நாங்க போடுறோம்? சொல்லேன்...என விளையாட்டுத் தனமாக கேள்விகளை தொடர்ச்சியாக கோர்க்க...

ராதிகா, யோசித்தவளாய்!!!,.. என்ன? உங்க மத்துல பொம்பளைங்க மட்டும், இப்டித்தா இருக்கனும்ன்னு சொல்லிவச்சுருக்கு,அத கட்டாயம் ஃபாலோப் பண்ணனும்ன்னு செய்யிரீங்க... இதுனால என்ன பெனிஃபிட்? பாரு நாங்கள்லா எவ்வளவு சுதந்திரமா இருக்கோம்...நீங்க அப்டி இல்ல.. அப்டி நீங்க இருக்க உங்க மதமும் அனுமதிக்கல,... விதியேன்னு போட்டுட்டு இருக்கீங்க... இல்லயா? என பொடிவைத்து புன்முறுவலுடன் பதிலளித்தாள்...

வியாழன், ஏப்ரல் 19, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 01

13 கருத்துகள் :

அட அல்லா! சரிடி.. ஃபோன மொதல்ல வைய்யி..அம்மா கத்துராக... பேச ஆரம்பிச்சா நிறுத்த்தமாட்டியே..!! வச்சுட்டேம்மா...என அம்மாவுக்கு பதில் சொல்லியவாரே.. வைய் வைய் நீ சொன்னதுலா நியாபகம் இருக்க்க்கு...சரி சரி.... என அம்மாவின் தொனதொனப்பு பொருக்காமல் ஹதிஜா போனை துண்டித்தாள்..ஏம்மா ராத்திரி நேரத்துல தொண்டத்தண்ணி வத்த, இப்டி கத்திட்டு இருக்க? என பொய்ச்சடவுடன் அறைக்குள் நுழைந்தாள்.. அந்த ராதிப்புள்ளக்கி போன எடுத்தா வெக்கெத்தெரியாதெ..என தனக்குத்தானே அம்மா புலம்புவதை கவனிக்காதவளாய், கவரை பிரித்து புதிதாய் வாங்கிய புடவையை தோளில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஹதி....இன்னும் லைட்ட அமத்தலியாடி..என அம்மா குரல்கொடுக்க... அமத்திட்டேம்மா என்ற குரலோடு விளக்கை அணைத்துவிட்டு,புடவையை கொடியில் போட்டுவிட்டு உறங்கச்சென்றாள்.

மறுநாள்:பரபரத்தவளாய்!..காலேஜுக்கு நேரமாச்சுமா...ராதிவேர நேரா காலேஜுக்கே வந்துர சொல்லிட்டா.. நான் கேண்டீன்ல எதாவது சாப்டுக்கிறேன்.. என சொல்லியவாரே, சைக்கிளை வெளியே எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டுவிட்டாள்..அடியே அடியே ஒருவா சாப்டு போடி... அம்மாவின் அடுப்படி குரலுக்கு, நீ சாப்டுமா என தெருவிலிருந்தே பதில் கொடுத்தவாறு ஹதிஜா சைக்கிளை அழுத்த..அம்மாவின் குரலும் மெல்ல ஓய்ந்தது..

சனி, ஏப்ரல் 14, 2012

அல்குர்ஆனை அறிவோம்...(என் ஹிந்து சகோதரர்களே)

3 கருத்துகள் :



அல்குர்ஆன் - தற்போது அனைவருக்கும் இதை அறிந்துகொள்ள,மற்றும் இதனைப்பற்றி விவாதிக்க துவங்கியிருக்கும் நிலையில்,இந்த இடுகையானது குர் ஆனைப் புரிதல் பற்றிய சில அடிப்படை செய்திகளை,முஸ்லீம் அல்லாத சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு, இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, இறைவன் வஹி எனும் இறைச் செய்தி மூலம் வழங்கியதே அல் குர்ஆன்.


குர்ஆன் என்பது ஒரே நாளில் அல்லது ஒரு மனிதர் சில காலம் செலவிட்டு ஒட்டுமொத்தமாக,எழுதி வெளியிட்ட புத்தகம் அல்ல.

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??

10 கருத்துகள் :

ஆடையில் பெரும் புரட்சியாக, நாகரீகத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக, நீண்டகாலமாக மக்கள் மத்தியில் உலாவி வருவது ஜீன்ஸ் என்றால் மிகையல்ல..அனைத்து தரப்பினராலும் விரும்பி அணியப்படும் இந்த ஆடை ஆரம்பத்தில் கப்பலோட்டிகளையும்,பின் விவசாய நிலங்களில் பணி புரிபவர்களையும்,அதை தொடர்ந்து சுரங்கப்பணிகளில் ஈடுபடுபவர்களையும் பயனாளிகளாகக் கொண்டு, சில காலங்களில் அனைவரும் பயன்படுத்தும் ஆடையாக உருமாறியதை அனைவரும் அறிவோம்.

முதலில் முழுமையான கீழாடையாக வெளிவந்த ஜீன்ஸ் பிற்காலங்களில் நாகரீகத்தை?? தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது.ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது. ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில்!.முன் பின் தொடைகளில், பின்புறத்தில், என அவை கிழித்தெடுக்கப்பட்டது. ஆணுக்கு முழுநீள ஆடை வழங்கிய நாகரீகம் ஏனோ பெண்ணுக்கு அதை அரைகுறையாக்கி உள்ளாடைக்கு மேலாடையாக்கியதோ தெரியவில்லை.

Counter

பிற பதிவுகள்